Thursday, 9th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கும்பகோணம்: கும்பகோணத்தில் தமிழகத்தில் பெய்து வரும் தீவிர பருவ மழையின் காரணமாக சுகாதாரத்தை பாதிக்கும் வகையில் கொசு உற்பத்தி அதிகமாக பெருகிவருகிறது. கொசுவை ஒழிப்பதற்கு திமுக கூட்டணி கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.
இது வரை நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி கொசுவை ஒழிப்பதற்கும் பொதுமக்களுக்கு டெங்கு வராமல் தடுப்பதற்கும் திமுக நகரம் சார்பில் நகரச் செயலாளர் தமிழழகன் தலைமையில் மகாமக குளம் அருகில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் வழங்கினார்கள்.